பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) - திருப்புகழ் உரை 285 மேலுலகத்துத் தேவர்கள் தொழும் ஆனைமுகக்கடவுள் சிவனை ஒடி வலம் வரும் முன்பே, மோதுகின்ற அலைகளையும் மகர மீன்களையும் உடைய கடல் சூழ்ந்த உலகை வலம் வந்த குதிரையாம் மயில் வீரனே! விளங்குகின்ற கலிசை என்னும் பதியில் வாழும் பராக்ரம சாலியின் (கலிசைச் சேவகனது) நெஞ்சத்தில் வீற்றிருக்கும் முதல்வனே! வயல்களும், நீர் நிலைகளும் பக்கங்களிற் பொருந்தியுள்ள வீன்ர என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள பழநியாம் ஞானமலையில் வீற் ಘೀ பெருமாளே! (கழலிணைகள். ஒரு சிறிதும் மறவேனே) 120 சி(ழ்) ரத்தம் எங்கும் பொருந்தி வரும் புழுக்கள் நிரம்பிய ழாயமல பிண்டம், நோய்க்கு இருப்பிட்ம்ாம் கூடு ஆகிய இவ்வுடலைத் தியும், நரிகளும், கழுகுகளும், காக்ங்க்ளும் ஆய இவை தின்பது நீங்காது. தீமை உள்ள குணங்களே பெருகும் சம்பந்தம் உள்ள மாயையில் வளர்ந்த தோல், சன்த் எலும்பு சேர்ந்துள்ள நரம்பு ஆகிய இவைகள் நிறைந்து நில்ைகாண் முடியாதது ஆன இந்த (உடம்பு):யமனது கையில் உயிர் போய்ச் சேர அந்த வேளையில் மிக ஊசிப் போகும் துன்பஞ் சேர்ந்த உடம்பு இத்தகைய உடம்பை விரும்பி அது நிலையுள்ள தென்று (கருதி) மாதர்களிடத்தே ஆசையை வைத்து விரும்பி, காம விஷம் மிக ஏறிச் தேர்வதால் மயக்கங்கொண்டு ஆழ்ந்த துயர்க் (கடலில்) விழுந்து மாண்டு போகின்ற என்மீது அன்பு புரிந்தருளு வாயாக; மாயைவல்ல கம்சனால் விடப்பட்டு, கோபமுடன் வந்து, உலக வதும், அண்ட கோளமும் நடுங்கும்படியாய், வாய் பிளிறி வந்து, மேகம் போன்ற கறுத்த தன் துதிக்கையால்