பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 198 முருகவேள் திருமுறை 12-திருமுறை ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்க 'ஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ ணங்கு மாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சு முரவோனே. ஆர்கலி யூடெ ழுந்து மாவடி வாகி நின்ற சூரனை மாள வென்று வானுல காளு மண்ட ரானவர் கூர ரந்தை தீரமு னாள்ம கிழ்ந்த முருகேசா; வாரண மூல மென்ற போதினி லாழி கொண்டு வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன் மருகோனே. வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்து ஆல் நிறை வான சங்கு மாமணி யீன வுந்து வாரிதி நீர்ய ரந்த சீரலை வாயு கந்த பெருமாளே. (69) 1. ஆதிரையான் - சிவன் ஆதிரையன் ஆருரமர்ந்தானே' - தேவாரம் - சம்பந்தர். 1 - 105 -1.