பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 முருகவேள் திருமுறை 12 திருமுறை - 58. திருவடி உற கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுணம் இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் முறையோடே வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி விட்டுவரு 'மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற வுணர்வேனோ, பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல் முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாயத் தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி சற்சமய வித்தைப் பலன் கண்டு செந்திலுறை பெருமாளே. (43) 59. அடியார்களுடன் இணங்க கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும். கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து கங்குல்பகல் என்று நின்று விதியாலே, 1. வருமித்தை வரும்.இத்தை வரும்இதை வரும் மித்தை - மித்தை பொய். 2. "அநேகமாயிரம் பேர் படக் கவந்த மொன்றாடும்" என்பர். கவந்தம் - சிறிது தொழிலுடன் கூடிய தலையற்ற உடல் 3. கொம்பு - யானைக்கொம்பு மாகயானை மருப்பேர் முலையினர்". அப்பர் 5.45.9.