பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 627 முடுகிவந்த சூரபத்மரின் (சூரனுடைய) தலையில் உள்ள மூளையானது துர்ளாகி முடிவுபெற ஆடின நடனமயில் வீரனே! முநிவர்களும், தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தத் தலமான் சோலை மாமலைக்குள் (வீற்றிருக்கும்) வேலனே! தியாக மூர்த்தியாம் (கொடையிற் றந்த மூர்த்தியாம்) சிவபிரான் ஈன்ற பெருமாளே! (உனது ஞான பாதபத்மம் உறுவேனோ) 443 (தம்மிடம் வருபவர்கள் தம்மீது வைத்த) பாசத்தால் (அவர்த்ம் காமப்) பற்றை உண்ர்ந்து விலை பேசி முடிவு செய்யும் வேசிகள்; தம்மை நேசித்தவர்களுடைய சித்தத்தை மருட்டுபவர்கள்; பாரமான மலையை ஒத்த கொங்கைகள் உடையவர்கள், மிகவுமே, LITബ வினைக் காரணத்தால் தேகம் எடுத்த வியபிசாரிகள். சீவி, ஆய்ந்து, முடித்தகூந்தலை உடையவர்கள், பார்வையாலேயே மேர்க்த்தை எழுப்பும் துட்டர்கள், நீங்காத அழுக்குப்பற்றி ஏறிய பித்தளை ஆபரணங்களைச் சாம்ப ட்டுப் பள்பளிப்பு உறும்ப்டி விளக்கிவைத்துள்ளவர்கள், மார்பிலும், காதிலும், (அந்த ஆபரணங்கள்ை) அணிந்து தளுக்கு செய்பவர்கள், அதிக ஆசையை ஊட்டுவிக்கும். (முன்பக்கத் தொடர்ச்சி) மதாணையிலுமக்கொழுகு தாழ்பசுஞ் சிறகர் மாயூரம் சேவலாம் வடிவுண் டாமென முறுவல் சிறிதுகூர்ந்துரைத்தனுப் பினனால்" - உபதேச (ஞானவரோதயர்) - செய்யுள் 84, t சூரனைச் சங்களித்தவுடன் முருகவேள் ஆடிய கூத்து -துடி' எனப்படும். சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடியும், சிலப்பதி 6.51. # பித்தளை ஆபரணங்களைச் சாம்பலிட்டு விளக்கி அணிதல். அக்காலத்திய வழக்கத்தை விளக்கும். முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற் கூட்டி முகமினுக்கி மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளை ஓலை விளக்கியிட்டுப் பட்டப் பகலின் வெளிமயக்கே செயும் பாவையர் மேல் இட்டத்தை நீதவிர்ப்பாயிறைவா கச்சியே கம்பனே" - பட்டினத் திருஏகம்பமாலை - 29,