பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 79 (கு உ) 'கார்மா மிசை காலன்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்' 2 அநுபூதி.10. த்ரியம்பகன் = முக்கண்ணன் அம்பகம் = கண். 81. யமனை வெருட்டல் தாரா கணமெனுந் தாய்மார் 1.அறுவர் தருமுலைப்பால் ஆரா 2துமைமுலைப் பாலுண்ட பால னரையிற் கட்டுஞ் 3.சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே. (அந்) அந்தகா தாராகண- வாராதகல், வந்தபோது உயிர் &Th.JITITEJ65PGIN_ijQTT. (பொ. உ) (அந்தகா) ஒஎமனே (தாரா கணம் எனும்) நக்ஷத்திரக் கூட்டம் எனப்படும் (தாய்மார் அறுவர்) கார்த்திகை மாதர் அ ■ (தரு முலைப்பால்) கொடுத்த முலைப்பாலை (ஆராது) உண்டு வயிறு நிரம்பாது உமாதேவியின் பாலையும் உண்ட (பாலன்) குழந்தையாம் முருகவேள் தமது அரையிலே கட்டியுள்ள (சீராவும்) உடைவாளும், கையில் உள்ள வாளும், வேலாயுதமும் என் உள்ளத்தே நிலைத்து விளங்குகின்றன; ஆதலால் (வாராது அகல்) நீ என்னிடம் வராமல் அகன்று ஓடிப்போ வந்தபோது என் சொல்லை மீறி வந்ால் உன்னுட்ைய உயிரையேமாய்த்துவிடுவேன். (சு- உ.) ஒ யமனே! முருகவேளின் வாளும் வேலும் என் தியானத்தில் சத்ா உள்ளன; ஆதலால் என்னிடம் வராதே வந்தால் | | உன் உயிரை வாங்கிவிடுவேன். H (கு உ)1"சரவணப் பூம்பள்ளியறைத் தாய்மாரறுவர்திரு முக்லப் பாலுண்டான்"-சிலப்பதிகாரம்-குன்றக்ருரவை 2உமை முலைப்பால் - பரஞானம். 3.சீரா - 27ஆம் பாடற் குறிப்பைக் காண்க. "கார்த்திகையின் முலைப்பாலும் கவுரிமுலைப் ப்ாலுமுண்டு. மூவர்தொழும் திருத்தணிகைமுதுகிரியில் எழுஞ் சுடரே" -தணிகைக் கலம்பகம் 1 82. பிரார்த்தனை தாளிணையைப் பணிய தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கே கட்டிப் பணியப் பணித்தரு ளாய் உபுண்ட ரீகனண்ட முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்டவெட்டிப் பேகட்டிற் பொருதிட்ட நிட்ரே ஆர பயங்கரனே. I (அந்) புண்டரீகன். பயங்கரனே தகட்டிற்-பணித்தருளாய்