பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை இதனாற் பெறப்படும். இன்று கொல் அன்று கொல் என்றுகொல் என்னாது பின்றையே து கூற்றம் என்றெண்ணி இறைவனைத் துதித்தல் ಧ್ಧಿ 'நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்க்ாள் என்ன்ே வழுத்தாத தெம்பிரான் மன்று நீதிநெறி 1 3. வேலின் ஆற்றல் தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற் கூரணி யிட்டனு வாகிக் கிரெளஞ்சங் குலைந்தரக்கர் நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்தது ஆர்ப் பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே. (பொ - உ) (தேவர்களையே) ஒரு தேராக (அணியிட்டு) அலங்கரித்துத் திரிபுரத்தை எரித்த வீே:து மகனாகிய குமரவேளின் செவ்விய திருக்கரத்தில் உள்ள வேலின் (கூர்) கூரிய பாகம் (அணியிட்டு) அண்ணியிட்டு சமீபித்து - அல்லது அணியிட்டு படை வகுத்ததுபோல அமைந்து - அணுவாகி அணுகுண்டுபோல ஆற்றல் அமைந்த காரணத்தால் - கிரெளஞ்சமலை ( ந்து) அழிபட்டு, (அல்லது கிரெளஞ்சம் அணுவாகிக் குலைந்து ரெளஞ்சம் அணுபோலப் பொடிப் பொடியாய் அழிந்து) அரக்கர்களின்_கடகம் - நேர் அணியிட்டு - ஒழுங்காக அணி படை வகுக்கப்பட்டு (வளைந்த கடகம்) சூழ்ந்து நின்ற அரக்கர் சேனை (நெளிந்தது) கெட்டு நிலை குலைந்தது. சூரனுடைய பேரணி சேனையின் பின்னணியும் (கெட்டது) சிதறி அழிந்தது. - தேவேந்திரனுடைய உலகம் பிழைத்தது. (சு - உ. வேல் பட்டதனால் கிரெளஞ்சம் குலைந்தது, சூரன் சேனை அழிந்தது. இந்த்ரலோகம் பிழைத்தது. - கிரெளஞ்சம் =மாயை. கடகம் = சேனை - கன்மம். சூர் (یا se - زG) ஆணவம் பேரணி = கூழை = பின்புடை, கூழை யென்பது பேரணியாகும் - பிங்கல நிகண்டு புரம் எரித்த வரலாறு - திருப்புகழ் 285, பக்கம் 206; 1021 - பக்கம் 68 கீழ்க்குறிப்பு. 4. தன் குறை கூறல் ஒரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள் சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச் சோரநிட் ரேனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக் கூரகட் டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே. (அந்) தேவர் உய்யச் சென்று சோர நிட்டுரனை. கொன்றவனே! ஐவர் ஒர ஒட்டார்டதாள் சேர ஒட்டார், யான் செய்வது என்?