Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   3 - மகேந்திர காண்டம்   next kandam3 - mahEndhira kANdam

previous padalam   5 - அதிவீரன்வதைப் படலம்   next padalamadhiveeranvadhaip padalam

Ms Revathi Sankaran (3.51mb)




(அன்னதொர் பான்)

அன்னதொர் பான்மைக ளாக இலங்கை
     முன்னுறு வார்கடல் ஆழ்ந்தது மூழ்க
          இந்நகர் போற்றி இருந்திடு கின்ற
               மின்னுனை வேல்அதி வீரன் உணர்ந்தான். ......    1

(தனது புரங்கடல்)

தனது புரங்கடல் சாருதல் காணா
     நனிதுயர் எய்தினன் நாணும் அடைந்தான்
          சினவி யுயிர்த்தழல் சிந்த நகைத்தான்
               அனையவன் இன்னத கத்திடை கொண்டான். ......    2

(சுந்தர மேவரு)

சுந்தர மேவரு சூரபன் மாவோ
     அந்தமில் தம்பிய ரோவனை யார்தம்
          மைந்தர்க ளோமதி யேன்அவ ரல்லால்
               இந்த வியற்கையை யார்புரி கிற்பார். ......    3

(ஆயவர் என்னினும்)

ஆயவர் என்னினும் ஆங்கது செய்தற்
     கேயதொ ரேதுவும் இன்றுதம் மூர்க்குத்
          தீயது செய்கலர் சிந்தைய தன்றால்
               மாயையும் ஈது மதிக்கிலள் போலும். ......    4

(மூவரும் இச்செயல்)

மூவரும் இச்செயல் முன்னலர் பின்னர்த்
     தேவர்கள் யாரிது செய்திட வல்லார்
          ஏவரும் நஞ்சிறை எய்தினர் வேள்விக்
               காவலன் ஆருயிர் காத்து மறைந்தான். ......    5

(மாதிர மேலவர்)

மாதிர மேலவர் வானிடை வைப்பின்
     மேதகும் விண்ணவர் விஞ்சையர் சித்தர்
          ஆதியர் நம்மிறை ஆணையின் நீங்கார்
               ஈது புரிந்திட எண்ணுவர் கொல்லோ. ......    6

(தவ்வற ஈண்டமர்)

தவ்வற ஈண்டமர் தானவர் ஆற்ற
     மெய்வலி மாயைகள் மேவின ரேனுந்
          தெவ்வடு சூர்முதல் திண்படை யஞ்சி
               இவ்வியல் தன்னை இழைக்கலர் போலும். ......    7

(ஆதலின் அன்னவர்)

ஆதலின் அன்னவர் ஆற்றலர் என்னின்
     ஈதொரு செய்கை இழைத்தவர் யாரோ
          தாதை அகன்றுழி தானவ ரோடுங்
               காதலின் இந்நகர் காத்தது நன்றால். ......    8

(காய மொடுங்கு)

காய மொடுங்கு கனற்சிர மூடு
     போயது வல்லை புறஞ்செல நோற்று
          மாயை பெரும்படை வன்மைகள் வேதன்
               ஈயமுன் வாங்கிய என்செயல் நன்றால். ......    9

(தந்தை யுறாது)

தந்தை யுறாது தணந்துழி ஆங்கோர்
     மைந்தன் இருந்துதன் மாநக ரோடும்
          அந்தி லகன்கடல் ஆழ்ந்தனன் என்றால்
               நந்தமர் என்னை நகைப்பர்கள் அன்றே. ......    10

(மன்னவன் ஈது)

மன்னவன் ஈது மதித்திடின் மற்றென்
     றன்னை அடும்பெறு தாதையும் அற்றே
          பின்னுளர் எள்ளுவர் பெற்றியி தாமேல்
               என்னியல் நன்றென எண்ணி இனைந்தான். ......    11

(இனைந்ததி வீர)

இனைந்ததி வீர னெனுந்திறல் மைந்தன்
     கனைந்திடு கின்ற கடற்கிடை யாழ்வோன்
          அனந்தர மூழ்வினை ஆற்றலின் அன்னான்
               மனந்தனில் ஈதொரு தன்மை மதித்தான். ......    12

(ஒல்லொலி சேரு)

ஒல்லொலி சேரு வரிக்கடல் மீதாய்ச்
     செல்லுவன் யாரிது செய்தனர் என்றே
          வல்லையில் ஓர்குவன் மற்றவர் தம்மைக்
               கொல்லுவன் மெய்ப்படு சோரி குடிப்பன். ......    13

(என்றதி வீரன்)

என்றதி வீரன் இரும்படை யாவும்
     ஒன்றற வாரி உருத்த னிகத்துள்
          நின்றுளர் தங்களை நேடுபு கொண்டே
               வன்றிரை வேலையின் மீமிசை வந்தான். ......    14

வேறு

(விடலைதிரு முன்ன)

விடலைதிரு முன்னமதி வீரன்அனி கங்கள்
     புடையில்வர நீரின்மிசை பொள்ளென எழுந்தான்
          அடுதொழில் இயற்றியிடும் ஆதிதனை யெய்தக்
               கொடியவிடம் வார்கடல் குலாய்நிமிர்வ தேபோல். ......    15

(விழுந்திடும் இலங்கை)

விழுந்திடும் இலங்கைதனில் மேவும் அதிவீரன்
     எழுந்துதன தானையொ டிருங்கட லுளங்கிக்
          கொழுந்துமிசை சென்றனைய கோலமொடு நின்ற
               செழுந்திறல்கொள் மொய்ம்புடைய செம்மல்நிலை கண்டான். ......    16

(கண்டனன் வெகுண்)

கண்டனன் வெகுண்டிதழ் கறித்துநகை செய்யா
     அண்டர்குழு வானிவனொர் ஆண்டகைநம் மூதூர்
          தெண்டிரையில் ஆழும்வகை செய்தும்இவண் நின்றான்
               எண்டிசை தொழுந்தகுவர் ஆணையினி தென்றான். ......    17

(என்றுமொழி யாவி)

என்றுமொழி யாவிரைவில் யாளிமுகன் மைந்தன்
     கொன்றிவன தாருயிர் குடிப்பனென உன்னிச்
          சென்றிடலும் ஆழ்ந்தவர் செயற்கையது காண்பான்
               நின்றதொரு பேரறிஞன் நீர்மையது கண்டான். ......    18

(ஆனபொழு தத்தினில் அவ)

ஆனபொழு தத்தினில் அவன்புடையில் வந்த
     தானவர்கள் சூழ்ந்தனர் சமர்த்தொழி லியற்ற
          மானவிற லோன்றனது வாளுறை கழித்தே
               ஊனொடுயிர் சிந்தியிட ஒல்லையடல் செய்தான். ......    19

(அற்றன சிரத்தொ)

அற்றன சிரத்தொகுதி அற்றன கரங்கள்
     அற்றன புயத்தொகுதி அற்றன பதங்கள்
          அற்றன பெரும்புறமும் அற்றவுடன் முற்றும்
               அற்றனர்கள் யாருமுயிர் அற்றதவர் பூசல். ......    20

(பங்கிசெறி செந்த)

பங்கிசெறி செந்தலைகள் பாய்குருதி நீர்மேல்
     எங்கணும் மிதப்பன இருங்கடலி னூடே
          செங்கொடி படர்ந்திடு செழும்பவள வைப்பில்
               அங்கமல மானவை அலர்ந்திடுதல் போலும். ......    21

(அற்றமகல் வீரன்)

அற்றமகல் வீரன்அவு ணப்படை துணிப்பச்
     செற்றிய பிணத்தொகை திரைப்புணரி தூர்த்து
          மற்றுமிசை போந்துமணி யாலுமொரி லங்கைப்
               பொற்றைய தியற்றியது போன்றுளது மாதோ. ......    22

(தன்படை விளிந்து)

தன்படை விளிந்துசல திக்கடலுள் வீழ
     முன்பன்அதி வீரன்முனி யாவதனை நோக்கி
          என்புடையி னோரையெறிந் தாய்கடிதின் நின்னைத்
               தின்பனது காண்டியென வேசெருமு யன்றான். ......    23

(சொல்லும்அதி வீரன்)

சொல்லும்அதி வீரன்வரு தோற்றமது காணா
     வல்லைவரு கென்றுதிறல் வள்ளலும் அழைப்ப
          எல்லையத னிற்செருவின் ஏற்றிவனை இன்னே
               கொல்லுகென அங்கணொரு குந்தம தெறிந்தான். ......    24

(உய்த்ததொரு கூர)

உய்த்ததொரு கூரயிலு ரத்திலுறு முன்னர்
     மத்தகய நேர்விடலை மற்றது தெரிந்தே
          கைத்தல மிருந்திடு கனற்புரையும் வாளால்
               அத்துணை இரண்டுதுணி யாய்விழ எறிந்தான். ......    25

(கண்டமுற ஞாங்க)

கண்டமுற ஞாங்கரது கண்டுதிறன் மைந்தன்
     தண்டம்விரைந் தொன்றொரு தடக்கைகொ டெடுத்தே
          மண்டமர்செ யுன்னுயிரை வாங்குமிஃ தென்னா
               அண்டர்புகழ் காளைதன தாகமுற விட்டான். ......    26

வேறு

(விட்ட காலையத் தண்)

விட்ட காலையத் தண்டினை வெலற்கருந் திறலோன்
     அட்டி டான்தனி வாளினால் ஏற்றனன் அகலம்
          பட்டு மற்றது நுண்டுக ளாகஅப் பதகன்
               மட்டி லாததோர் விம்மிதம் எய்தினன் மறுகி. ......    27

(வேறொர் முத்தலை)

வேறொர் முத்தலைப் படையது கொண்டதி வீரன்
     மாறி லாவிறல் மொய்ம்பினன் தன்மணி மார்பின்
          ஊறு செய்திறம் ஓச்சலுங் கண்டுநம் முரவோன்
               சீறி யாங்கது பற்றினன் செங்கையால் இறுத்தான். ......    28

(இறுத்த காலையில்)

இறுத்த காலையில் இலங்கையில் யாளிமா முகன்சேய்
     செறுத்து மற்றிவன் தனைஅடல் அரிதெனச் சிந்தை
          குறித்து மற்றொரு நாந்தகம் ஏந்தினன் குறுகி
               வெறித்த கொண்டலுட் கொட்புறு மின்னென விதிர்த்தான். ......    29

(கறங்கி னிற்பெரு)

கறங்கி னிற்பெரு வட்டணை புரிந்துதன் கரமேல்
     நிறங்கொள் வாளினை இடம்வலந் திரித்தனன் நெறியே
          பிறங்கும் ஆர்கலித் தெண்டிரை அலைதரப் பெரிது
               மறங்கொள் நாந்தக மீனுகண் டலமரும் வகைபோல். ......    30

(ஏதி யிங்கிது நான்)

ஏதி யிங்கிது நான்முகன் தந்துள தெவர்க்கும்
     பேத கஞ்செயல் அரியதால் அன்னது பிடித்தேன்
          சாதி திண்ணநீ வருகெனா மிகைமொழி சாற்றிக்
               கோதில் வீரன்முன் அணுகலும் அனையவன் கூறும். ......    31

(நன்று நன்றுநின்)

நன்று நன்றுநின் னாற்றலும் ஆண்மையும் நம்மை
     வென்றி யேயெனின் யாவரும் மேலுனை வியப்பார்
          நின்று நீசில மொழிவதென் கடிது நேருதியால்
               வென்றி வீரருந் தமைப்புகழ் கிற்பரோ வென்றான். ......    32

(என்ன ஒன்னலன்)

என்ன ஒன்னலன் கிடைத்தனன் வீரனும் எதிர்ந்தான்
     அன்ன பான்மையர் வாளம ராடினர் அகல்வான்
          மின்னு மாமுகில் தோன்றியே எதிரெதிர் விரிந்து
               பின்ன ருள்புகுந் துடனுடன் செறிந்தபெற் றிமைபோல். ......    33

(சென்னி நாடுவர்)

சென்னி நாடுவர் களத்தினை நாடுவர் செவிதாள்
     கன்ன நாடுவர் புயங்களை நாடுவர் கரங்கள்
          உன்னி நாடுவர் உரத்தினை நாடுவர் உகளப்
               பொன்னின் வார்கழல் நாடுவர் வாளமர் புரிவார். ......    34

(இணங்கு நீரவர்)

இணங்கு நீரவர் இருவரும் இனையன உறுப்பில்
     அணங்கு செய்திடும் மரபினா லாயிடை உய்ப்பார்
          நுணங்கு விஞ்சையின் வன்மையான் நொய்தின்மாற் றிடுவார்
               மணங்கொள் செந்நிற வாள்கொடே வட்டணை வருவார். ......    35

(போத மின்னதில்)

போத மின்னதில் எம்பிரான் தூதுவன் பொருவான்
     ஏதி கொண்டுளான் தன்னையான் வலிந்திடல் இயல்போ
          ஆத லாலிவன் படைமுறை வெல்வதே அறனென்
               றோதி சேருளங் கொண்டனன் இடைதெரிந் துற்றான். ......    36

(இடை புகுந்ததி)

இடை புகுந்ததி வீரன தடிகளோ ரிரண்டும்
     முடியும் ஆகமுந் தோள்களும் ஆங்கொரு முறையே
          சுடர்பி றங்கிய வாளினால் ஆண்டகை துணித்துக்
               கடிது வீட்டினன் நடுவன்வந் தவனுயிர் கவர்ந்தான். ......    37

ஆகத் திருவிருத்தம் - 3866



previous padalam   5 - அதிவீரன்வதைப் படலம்   next padalamadhiveeranvadhaip padalam

previous kandam   3 - மகேந்திர காண்டம்   next kandam3 - mahEndhira kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]