Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   38 - இந்திரன் மீட்சிப் படலம்   next padalamindhiran meetchip padalam

Ms Revathi Sankaran (1.00mb)




(அகல நின்றதோர்)

அகல நின்றதோர் வீரமா காளனாம் அடலோன்
     உகவை யோடுறு சசியினை நோக்கிநின் னுளத்தில்
          தகுவர் தங்களுக் கஞ்சலை அன்னையுன் தலைவன்
               புகுதும் எல்லையும் அளிப்பன்ஈண் டுறைகென்று போனான். ......    1

(போன காலையிற்)

போன காலையிற் புலோமசை அடவியம் புறனோர்
     மானி னம்பிரிந் துற்றென அவ்வனம் வைகிக்
          கோன வன்வினை முற்றிய நோற்றனள் குறிப்பால்
               ஆன பான்மையை நாரத முனிவரன் அறிந்தான். ......    2

(மேலை வெள்ளி)

மேலை வெள்ளியம் பருப்பதந் தனில்விரைந் தேகிச்
     சீல விண்ணவர் தம்முடன் சிவனடி பரவக்
          கால மின்றியே இருந்திடும் இந்திரன் கடைபோய்
               ஞாலம் வைகிய புலோமசைக் குற்றவா நவின்றான். ......    3

(நவின்ற வாசக)

நவின்ற வாசகங் கேட்டலும் மகபதி நனியுட்
     கவன்று தேறியே முனிந்துபின் இறையருள் கருதி
          அவன்றன் மாமுறை தூக்கியே தன்னைநொந் தழுங்கித்
               துவன்ற தேவரோ டெழுந்தனன் அரன்புகழ் துதித்தே. ......    4

(வந்து நந்தியெம்)

வந்து நந்தியெம் மடிகளின் அடிமுறை வணங்கி
     அந்த மில்பகல் வேலைநோக் குற்றனம் அமலன்
          சிந்தை செய்தெமை யருள்புரிந் திடுகிலன் தீயேம்
               முந்தி யற்றிய தீவினைப் பகுதியை முன்னி. ......    5

(கைம்மை யாம்பெயர்)

கைம்மை யாம்பெயர் அணங்கினோர் பெறாவகை கறுத்த
     செம்மை யார்களத் தெம்பிரான் எமக்கருள் செய்வான்
          பொய்ம்மை தீர்தவம் இயற்றிட நிலமிசைப் போதும்
               எம்மை யாங்கருள் புரிந்தனை விடுத்தியென் றியம்ப. ......    6

(நன்று போமென)

நன்று போமென நந்தியெம் பெருந்தகை நவிலத்
     துன்று வானவர் தம்மொடுங் கழுமலந் துன்னி
          நின்ற வீரமா காளனைக் கண்டனன் நேர்போய்ச்
               சென்று புல்லியே முகமன்ஓர் அளப்பில செப்பி. ......    7

(போதி ஐயவென்)

போதி ஐயவென் றனையனை ஐயன்பாற் புகுத்தி
     மாது நோற்றுழிக் குறுகியே அவள்துயர் மாற்றிக்
          கேதம் எய்திய அசமுகி சூளுரை கேளா
               ஏது செய்வதென் றுன்னினன் இமையவர்க் கிறைவன். ......    8

(சுடர்ப்பெ ருங்குலி)

சுடர்ப்பெ ருங்குலி சத்திறை சூழ்ந்தனன் துணியா
     அடுத்த மங்கையை யுடன்கொடே விரைந்தவண் அகன்று
          புடைக்கண் வந்திடுங் கடவுளர் தம்மொடும் புராரி
               எடுத்த வார்சிலைப் பொற்றையிற் கரந்தனன் இருந்தான். ......    9

ஆகத் திருவிருத்தம் - 3425



previous padalam   38 - இந்திரன் மீட்சிப் படலம்   next padalamindhiran meetchip padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]