Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   33 - இந்திரன் கயிலை செல் படலம்   next padalamindhiran kayilai sel padalam

Ms Revathi Sankaran (1.67mb)




(அத்துணை தன்னில்)

அத்துணை தன்னில் அருந்துணை இல்லான்
     மெய்த்துணை யாகிய மின்னினை நோக்கி
          எய்த்திடல் ஐயன் அளிக்குவன் ஈண்டே
               சித்தம் வருந்தல் எனத்தெளி வித்தான். ......    1

(மாதினை அவ்விடை)

மாதினை அவ்விடை மன்னுற வைத்தே
     பேதுறு வானவர் பேரவை நண்ணிப்
          போதுமெ னக்கொடு போந்து விரைந்தே
               நாதன் அகன்கிரி நண்ணினன் அன்றே. ......    2

(அந்தர வைப்பில்)

அந்தர வைப்பில் அமர்ந்தவர் தம்மோடு
     இந்திரன் அக்கயி லைக்கிரி யெய்தி
          நந்திபி ரானுறை நன்கடை சேரா
               வந்தனை செய்து வழுத்தினன் நின்றான். ......    3

(நிற்றலும் வந்ததென்)

நிற்றலும் வந்ததென் நீபுகல் என்னச்
     சொற்றனன் அங்கது தொன்மையின் நாடி
          இற்றில கொல்லுன் இருந்துய ரென்னா
               நற்றவர் காணுறு நந்தி யுரைப்பான். ......    4

(நால்வர் உணர்ந்திட)

நால்வர் உணர்ந்திட நாயகன் ஞான
     மூல வியோக முதற்பொருள் காட்டி
          ஏல இருந்தனன் யாவரும் ஏகக்
               கால மிதன்றென வேகழ றுற்றான். ......    5

(தேறுத வஞ்செய்)

தேறுத வஞ்செய்சி லாதனன் மைந்தன்
     கூறிய வாய்மை குறிக்கொள ஓர்ந்து
          மாறியி ழிந்திடு வல்விட மற்றும்
               ஏறிய தென்ன இடர்க்கட லுற்றான். ......    6

(இம்பரின் வாசவன்)

இம்பரின் வாசவன் இன்னல் உழப்ப
     உம்பர்கள் தாமும் உடல்தளர் வுற்றார்
          தம்பம தான தடம்புணை தாழ
               அம்புதி தன்னில் அழுந்திடு வார்போல். ......    7

(செல்லல் உழந்து)

செல்லல் உழந்து தியங்கிய தேவர்
     எல்லவர் தம்மொடும் இந்திர னென்போன்
          நல்லருள் செய்திடு நந்திபி ரான்றன்
               மெல்லடி போற்றி விளம்புதல் செய்வான். ......    8

(தூய்நெறி நீங்கிய)

தூய்நெறி நீங்கிய சூரபன் மாவுக்
     காயுவொ டாற்றல் அளப்பில செல்வம்
          ஏயவை யாவும் இருந்தவ நீரால்
               நாயகன் முந்துற நல்கினன் அன்றே. ......    9

(நாங்கள் புரிந்திடு)

நாங்கள் புரிந்திடு நல்வினை நீங்கித்
     தீங்கு குறித்தெழு தீவினை சேர
          ஆங்கவன் ஏவலின் அல்லலு ழந்தேம்
               ஈங்கிது வும்மிறை வன்செயல் ஐயா. ......    10

(சூனர் இயற்கை)

சூனர் இயற்கை சுரர்க்கருள் செய்யும்
     மாநிரு தர்க்கிறை வன்புரி துன்பம்
          ஆன துணர்த்தி அடைந்தனம் என்னில்
               தானது போழ்து தவிர்த்திடல் வேண்டும். ......    11

(நீர்த்திரை போல)

நீர்த்திரை போல நெறிப்பட யாங்கொள்
     ஆர்த்திய கற்றி அறந்தவிர் சூரன்
          மூர்த்திகொள் ஆவியும் மொய்ம்பொடு சீருந்
               தீர்த்திடு கின்ற திறஞ்செயல் வேண்டும். ......    12

(அன்னது செய்திடி)

அன்னது செய்திடின் அன்பறு சூரன்
     முன்னர் அருந்தவ முற்றிய காலைச்
          சொன்ன வரந்தொலை யுந்தொலை வானாற்
               பின்னர் அவன்சொல் பிழைத்தனன் என்பார். ......    13

(அல்லதெம் மல்லல்)

அல்லதெம் மல்லல் அகற்றிலன் என்னில்
     நல்லரு ளுக்கொரு நாயகன் என்றே
          எல்லவ ரும்புகழ் ஏற்றமும் இன்றாம்
               தொல்லை மறைப்படி யுந்தொலை வாமால். ......    14

(ஆகையின் இவ்வகை)

ஆகையின் இவ்வகை ஆய்ந்தெமை யாளும்
     பாக நினைந்து பரம்பொரு ளானோன்
          மோகமி லார்பெற மோனக ஞான
               யோகியல் காட்டி யுறைந்துள னேகொல். ......    15

(ஈங்கிவன் அல்லதை)

ஈங்கிவன் அல்லதை இத்திற மாகுந்
     தீங்கினை நீக்கவொர் தேவரும் இல்லை
          ஓங்கிய மாலவ ரோடமர் செய்தே
               ஆங்கவன் நேமியும் அற்றனன் ஐயா. ......    16

(மூவரின் முந்திய மூர்த்தி செய)

மூவரின் முந்திய மூர்த்தி செயற்கை
     யாவதும் ஈதென அண்டரும் யானும்
          பூவுல கத்திடை போந்திடின் இன்னே
               தீவினை யார்சிறை செய்வது திண்ணம். ......    17

(ஆதலின் ஆயிடை)

ஆதலின் ஆயிடை அண்டரும் யானும்
     போத லிலைப்புனி தன்கழல் காணத்
          தீதறு வேலை தனைத்தெரி வுற்றுன்
               வாய்தலின் ஓர்புடை வைகுவன் என்றான். ......    18

(பேர்பெறு நந்திபி)

பேர்பெறு நந்திபி ரானது கேளா
     ஆர்வுறும் இன்னல் அகன்றிவண் நீவிர்
          சேர்வுறு மென்றருள் செய்திட ஆங்கே
               ஓர்புடை வாசவன் அண்டரொ டுற்றான். ......    19

(வானவர் கோனரன்)

வானவர் கோனரன் மால்வரை தன்னிற்
     போனதும் உற்றதும் ஈண்டு புகன்றாம்
          மானபு லோமசை செய்கையும் அல்லா
               ஏனையர் செய்கையும் யாவும் இசைப்பாம். ......    20

ஆகத் திருவிருத்தம் - 3300



previous padalam   33 - இந்திரன் கயிலை செல் படலம்   next padalamindhiran kayilai sel padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]