Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அநுபூதி
51 செய்யுட்கள்

Sri AruNagirinAthar's
Kandhar AnubUdhi
51 verses

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 29  இல்லே எனும்
 
Kandhar Anuboothi illE enum with meanings by Thiru S. NatarajanThiru S Nadarajan    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை'
    திரு சு. நடராஜன் (சென்னை)

   Meanings in Tamil by
   'Thiruppugazh Adimai'
   Thiru S Nadarajan (Chennai)

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 29 ... இல்லே எனும்

(அறியாமையை பொறுத்தருள் முருகா)

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.

......... பதவுரை .........

மல்லே புரி ... போர் புரிவதற்கு ஏற்றதான,

பன்னிரு வாகுவில் ... பன்னிரு திருத் தோள்களிலும்,

என் சொல்லே புனையும் ... அடியேனுடைய பாமாலைகளையே
தரித்துக்கொண்டிருக்கும்,

சுடர் வேலவனே ... ஒளிவீசும் வேலாயுதக் கடவுளே,

இல்லே எனும் மாயையில் ... இந்த இல்வாழ்க்கை எனும்
மாயை வலையில்,

நீ இட்டனை ... அடியேனை சிக்க வைத்து விட்டாய்,

பொல்லேன் ... தீயவனாகிய என்னுடைய,

அறியாமை பொறுத்திலையே ... அறியாமையால் செய்த
பிழைகளை பொறுத்தாய் இல்லையே.

......... பொழிப்புரை .........

போர் புரிவதில், திறமை படைத்த உன்னுடைய பன்னிரு தோள்களிலும்
நான் இயற்றின திருப்புகழ் பாக்களையே மாலைகளாக அணிந்திருக்கும்
ஞான ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவனே,

   1. இல்லறம் என்னும் பிரகிருதி மாயையில்
   2. எனக்கு இதுதான் வீடு என்னும்படி உள்ள மாயையில்
   3. உண்மையிலேயே இல்லாத தத்துவமான அத்வைத
      கொள்கையின்படியான மாயையில்

என்னை அழுந்தும்படி செய்து விட்டாயே. அறியாமையினால் பல
தீங்குகள் செய்த பொல்லாதவன் நான். வினையிலே கட்டுண்டு
தன்னுடைய உண்மையான சொரூபம் அறியாமல் கெட்ட பூதருக்கு
சமமானவன் நான். அதன் விளைவாகவேதான் எனக்கு இந்த நிலை
வந்திருக்கிறது. இருப்பினும் தேவரீர் என்னுடைய அறியாமையை
பொறுத்து அருளக் கூடாதா?

......... விளக்கவுரை .........

நமக்கென்று சொந்தமான வீடு ஒன்றும் இல்லை. ஒன்று அறியாமை
காரணத்தால் மாயையின் வீட்டில் வாழவேண்டும். அல்லது
இறைவனுடன் பேரின்ப வீட்டில் வாழ வேண்டும். இதையே,

   .. ஒரு பூதரும் அறியா தனி வீடு ..

... என்பார். நாம் செய்த வினை காரணமாக பிரபஞ்ச சேற்றில்
அழுந்தி இருக்கிறோம். வினைக்கு ஈடாக பயனைத் தரும்
இறைவனே அருள் செய்து நம்மை முத்தி வீட்டில் இருத்திவைக்க
வல்லவன்.

இது சாதாரண உரையாகவேதான் தோன்றும். கூர்ந்து கவனித்தால்
இந்த உரையில் ஒரு குறைபாடு தெரியும். பாட்டின் பின் பகுதியில்
என் பாமாலைகளை விரும்பி, வலிமையான தன்னுடைய பன்னிரு
தோள்களிலும் அணிந்திருக்கும் முருகன் என்று பெருமைப்படுகிறார்.
இப்படிப்பட்ட அருள் கிடைத்த பிறகும் அருணகிரியார் மாயையான
வீட்டில் உழன்று கொண்டிருக்கிறார் என்பது பொருந்தாது.
பொருத்திலையே என்கிற வார்த்தைக்கு சற்று மாறுபட்ட பொருளைக்
கொண்டால் வேறு ஒரு அழகிய உரை கிடைக்கிறது.

தன்னுடைய வழி வழி அடிமையாகிய அருணகிரி மாயையில் சிக்கி
உழல்வதைப் பார்த்துக்கொண்டு பொறுக்காமல் (சகித்துக்
கொண்டிருக்காமல்), முருகப் பெருமான் அவர் முன் பிரத்யக்சமாக
குரு வடிவில் தரிசனம் கொடுத்து, நாவில் ஆறு எழுத்தைப் பொரித்து,
வயலூருக்கு வரச் சொல்லி, அங்கு நித்தம் திருப்புகழ் பாடும்
ஆற்றலைக் கொடுத்து அருளினார். அதன் பயனாக அருணகிரியார்
பாடின திருப்புகழ் பாக்களை முருகப் பெருமான் சிறப்பாக தனது
பன்னிரு தோள்களிலும் அணிந்து கொண்டு இருக்கிறான்.
இந்தக் கருத்தை திருவகுப்பிலும் காணலாம்.

   முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு
   துலகறிய மழலைமொழி கொடுபாடும் ஆசுகாவி
   முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன
   முகளபரி மளநிகிள கவிமாலை சூடுவதும்

இவ்விடத்தில் மாயைப் பற்றி ஆராய்வோம்.

   1. பல மாறுதலுக்கு உட்பட்ட இப் பிரபஞ்சம் எவ்வித மாறுதலும்
இல்லாத ஒரு பொருளிலிருந்து தொன்றுகிறது. நிலையற்ற
இவ்வுலகம் நிலையான பொருளிலிருந்து உற்பத்தி ஆகிறது.
அசைவுள்ள உலகம் அசையாத பொருளிலிருந்து வருகிறது.
இவ்வாறு மாறுதல் அடையாததும், நிலைத்ததும், அசைவில்லாத
பொருள்தான் பிரம்மம் எனப்படுகிறது. பிரம்மமே பிரபஞ்சமாகவும்
தோற்றமளிக்கிறது (கயிறு பாம்பு போல தோன்றுவது போல).
பரிணாம வாதப்படி பிரம்மமே பிரபஞ்சமாக உருவெடுக்கிறது.
ஆனால் அது எப்படி இருந்தாலும் உலக உற்பத்தியில் பிரம்மத்திற்கு
எந்த வித பாதிப்பும் கிடையாது. இந்த ஆச்சரியமான தொடர்புதான்
மாயை எனப்படுகிறது. பூர்ண மத என்ற மந்திரம் இங்கு நோக்கற்பாலது.

   2. எல்லையில்லாத பொருளை எல்லைப் படுத்துவதும்,
உருவமில்லாத பொருளுக்கு உருவத்தைக் கொடுப்பதும்
குணமில்லாத ஒன்றுக்கு குணத்தைக் கொடுப்பதும்,
பெயரில்லாததற்கு பெயர் கொடுக்கும் தத்துவமே மாயை.
இங்கு மாயையின் சலனத்தால், குணம், குறி, நாமம், ரூபம்
ஒன்றுமில்லாத பிரமத்தை எல்லாவற்றோடும் சேர்ந்த நிலையில்,
சினிமாப் படம் காட்டுவது போல, நடத்திக் காட்டுவது மாயையே.

   பிரம்மம் இரண்டு நிலையிலும் பேசப்படுகிறது.

   . மாயையை தன்னுள் அடக்கி இருக்கும் நிலை (Static state).
   . உலக சிருஷ்டிக்காக மாயை பிரிந்து நிற்கும் நிலை (Kinetic state).

முந்தியது நிர்குண பிரம்மம், பிந்தியது சகுணப் பிரம்மம்.

   3. பிரம்மத்தின் ஆற்றலுக்கும் மாயை என்றே பெயர். அம்பாளை
மாயை என்று வழங்குவதைப் பார்க்கலாம். சூரியனிடமிருந்து
கிரணத்தை பிரிக்க முடியாது. அதுபோல பிரம்மத்திலிருந்து
சக்தியைப் பிரிக்க முடியாது.

   4. இந்த சக்தி ஆவாரணம் விட்சேபம் என இரண்டு தொழிலை
செய்ய வல்லது. உள்ளதை மறைப்பது ஆவாரணம். இல்லாததை
தோற்றுவிப்பது விட்சேபம்.

   5. சைவ சித்தாந்தத்தில் மாயை என்பதற்கு எதில் எல்லாம்
மாய்ந்து எதிலிருந்து மறுபடியும் தோன்றுகிறதோ அதுதான் மாயை.
வேதாந்தத்தில் மாயை என்பதற்கு உண்மையான பொருள் அல்ல
என்று கூறுவார்கள். சித்தாந்திகளுக்கு பதி, பசு, பாசம் மூன்றும்
உள்ள பொருள்கள். இதில் பாசம் என்பது மாயை.

என்னுடைய பழைய வினைக்கு ஈடாக எனக்கு இந்த இல்
வாழ்க்கையை கொடுத்தவன் நீ. அப்படி இருந்தும் நான் உன்னை
புகழ்ந்து பாடும்பொழுது நீ எனக்கு தந்தை தாய் என்றே இருக்கவும்
நானும் இப்படியே தவித்திடவோ என்று நான் பாட நீ மனம் இரங்கி
என்னை வந்து ஆட்கொண்டாய்.

பல அருளாளர்கள் பாட்டிலும் இப்படிப்பட்ட கருத்துக்களை காணலாம்.

   .. நாய் போன்ற என்னையும் ராஜ பல்லக்கில்
   ஏற்றுவித்தாயே ..

... என மாணிக்கவாசகர் பாடுகிறார்.
go to top
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.668  pg 4.669 
 WIKI_urai Song number: 29 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.11mb
 to download 
Malai Mandir Ishwinderjit Singh
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங்

'MalaiMandir' Thiru Ishwinderjit Singh
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.28mb
 to download 
Chennai Revathy Sankaran
சென்னை ரேவதி சங்கரன்

Revathy Sankaran (Chennai)
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.43mb
 to download 
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam
 51 செய்யுட்கள்  51 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
52-101 செய்யுட்கள்  52-101 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
 பொருள் - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)  SS
 51 verses - English Transliteration   51 verses (with audio)
 52-101 verses - English Transliteration   52-101 verses (with audio)
 Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)  SS
 அகரவரிசைப் பட்டியலுக்கு   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 For Alphabetical List   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar Anuboothi - Verse 29 illE enum

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]